ஏவம் ப1ரம்ப1ராப்1ராப்1த1மிமம் ராஜர்ஷயோ விது3: |
ஸ கா1லேனேஹ மஹதா1 யோகோ3 நஷ்ட1: ப1ரந்த1ப1 ||2||
ஏவம்—--இவ்வாறு; பரம்பரா—--தொடர்ச்சியான பாரம்பரியத்தில்; ப்ராப்தம்——-பெறப்பட்டது; இமம்—-—இது (அறிவியல்); ராஜ-ரிஷயஹ—--துறவி அரசர்கள்; விதுஹு—--புரிந்து கொண்டார்கள்; ஸஹ—--அந்த; காலேன—--— நீண்ட காலம் கடந்து; இஹ—-—இந்த உலகில்; மஹதா—--சிறந்த; யோகஹ—---யோகத்தின் அறிவியல்; நஷ்டஹ——-இழந்தது; பரந்தப-—--எதிரிகளை எரிப்பவனே;
BG 4.2: எதிரிகளை அடிபணியச் செய்பவரே, துறவிகளான மன்னர்கள் இந்த யோக அறிவியலை தொடர்ச்சியான பாரம்பரியத்தில் பெற்றனர். ஆனால் காலப்போக்கில், அது உலகத்திடம் இல்லாமல் போனது.
ஏவம் ப1ரம்ப1ராப்1ராப்1த1மிமம் ராஜர்ஷயோ விது3: |
ஸ கா1லேனேஹ மஹதா1 யோகோ3 நஷ்ட1: ப1ரந்த1ப1 ||2||
எதிரிகளை அடிபணியச் செய்பவரே, துறவிகளான மன்னர்கள் இந்த யோக அறிவியலை தொடர்ச்சியான பாரம்பரியத்தில் பெற்றனர். ஆனால் காலப்போக்கில், அது உலகத்திடம் இல்லாமல் போனது.
Sign in to save your favorite verses.
Sign InStart your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
தெய்வீக அறிவைப் பெறுவதற்கான இறங்கு செயல்பாட்டில், ஒரு சீடர் அவர் குரு அவரது குருவிடமிருந்து பெற்ற கடவுளை உணரும் அறிவியலைப் புரிந்துகொள்கிறார்,. அத்தகைய பாரம்பரியத்தில்தான் நிமி மற்றும் ஜனக் போன்ற துறவி மன்னர்கள் யோக அறிவியலைப் புரிந்து கொண்டனர். இந்த பாரம்பரியம் உலகின் முதல் குருவான கடவுளிடமிருந்து தொடங்குகிறது.
தே1ன ப் 3ரஹ்ம ஹ்ருதா3 ய ஆதி 3-க1வயே முஹ்யந்தி 1 யத்1 சூரயஹ
(பா4க3வத1ம் 1.1.1)
இந்த வசனத்தின்படி, முதன்முதலில் பிறந்த ப்ரஹ்மமாவின் இதயத்தில் ஸிருஷ்டியின் தொடக்கத்தில் கடவுள் இந்த அறிவை வெளிப்படுத்தினார், மேலும் அவரிடமிருந்து பாரம்பரியம் தொடர்ந்தது. கடந்த வசனத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் இந்த அறிவை அவர் சூரியக் கடவுளான விவஸ்வானுக்கும் அளித்தார். இருப்பினும், இந்த ஜடவுலகின் தன்மையினால் காலப்போக்கில், இந்த அறிவு தொலைந்து போனது. பொருள்சார்ந்த மற்றும் நேர்மையற்ற சீடர்கள் அவர்களின் கறைபடிந்த கண்ணோட்டங்களின்படி போதனைகளை விளக்குகிறார்கள். சில தலைமுறைகளுக்குள், அதன் தூய்மையான தன்மை மாசுபடுகிறது. இவ்வாறு நிகழும்போது ஒப்புயர்வற்ற பகவான் அவரது காரணமற்ற கிருபையால் மனித குலத்தின் நன்மைக்காக இந்த பாரம்பரியத்தை மீண்டும் நிறுவுகிறார். மீண்டும் இந்த பாரம்பரியத்தை நிலைநாட்டுவதற்காக கடவுளே பூவுலகில் அவதரித்து அல்லது ஒரு கடவுளை உணர்ந்த துறவியை இந்த பூமியில் கடவுளின் பணிக்கு ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்.
இந்திய வரலாற்றில் ஐந்தாவது அசல் ஜகத்குருவாக இருந்த ஜகத்குரு ஸ்ரீ கிருபாலுஜி மஹராஜ், நவீன காலத்தில் பண்டைய அறிவை மீண்டும் நிலைநாட்டிய கடவுளால் ஈர்க்கப்பட்ட துறவி ஆவார். அவருக்கு முப்பத்தி நான்கு வயதாக இருந்தபோது, புனித நகரமான காசியில் உள்ள ஐந்நூறு வேத பண்டிதர்களின் உன்னத அமைப்பான காசி வித்வத் பரிஷத் அவருக்கு ஜகத்குரு அல்லது ‘உலகின் ஆன்மீக குரு’ என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது. ஜகத்குரு சங்கராச்சாரியர், ஜகத்குரு நிம்பர்காச்சார்யா, ஜகத்குரு ராமானுஜாச்சாரியார் மற்றும் ஜகத்குரு மத்வாச்சார்யா ஆகியோருக்குப் பிறகு ஜகத்குரு என்ற அசல் பட்டத்தைப் பெற்ற இந்திய வரலாற்றில் ஐந்தாவது துறவி ஆனார். பகவத் கீதை பற்றிய இந்த வர்ணனை ஜகத்குரு ஸ்ரீ கிருபாலுஜி மகராஜ் அவர்களால் எனக்கு வெளிப்படுத்தப்பட்டபடி, அதன் நுண்ணறிவுப் புரிதலின் அடிப்படையில் எழுதப்பட்டது.